இணையத்தள வாசகர்களின் கவனத்திற்கு….. மிக விரைவில் இவ் இனணயதளதில் அதிக அளவான ஆக்கங்கள் இனணக்கபடும் உங்கள் ஆக்கங்கள் இடம்பெற விரும்பினால் எமக்கு உடன அனுப்புகள் ஆயினும் எவராக இருப்பினும் ஆக்கபூர்வமாக தரமான வார்த்தைகளில் நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் மட்டுமே நாம் எமது இணையத்தளத்தில் பிரசுரிப்போம். theshan_10@yahoo.com .நன்றி.--திஷாந்--.

August 20, 2007

Bluewin அல்லது Hotmail எக்கவுண்டை எவ்வாறு Outlook Express ல் ஏற்படுத்திக்கொள்வது

ஏன் நாங்கள் Outlook Express ல் எக்கவுண்ட் உருவாக்கவேண்டுமெனில் உங்களுக்கு இலவச
இ-மெயில் எக்கவுண்ட் தந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு இடத்தை Server ல் தந்திருப்பார்கள் எனவே தொடர்ந்து வரும் இ-மெயில்கள் இடத்தை நிறைத்துவிடும்.அதனால் உங்களுக்கு வரும்
இ-மெயில் வரத்தடைப்படும் . அதானல் Outlook Express ல் ஒரு எக்கவுண்ட் உருவாக்கினால் உங்களுக்கு வரும் இ-மெயில் அனைத்தும் நீங்கள் கணணியைத்திறக்கும்போது தானாகவே Download ஆகி Outlook Express ல் Posteingang ல் சேர்ந்துவிடும் Server ல் இருந்து அழிக்கப்பட்டுவிடும்

உங்கள் இ-மெயில் சேர்வர் காலியாக இருப்பதால் தங்குதடையின்றி இ-மெயில் வரும்

Outlook Express ல் Bluewin க்காக எக்கவுண்ட் உருவாக்குவோம்

Outlook Express ல் மெனுவில் Extras தெரிவுசெய்து Konten.. ஐ தெரிவுசெய்க படம்1

படம்1













படம்.2 கிடைக்கும் அதில் இ-மெயிலை தெரிவுசெய்க படம் 2 ல் இன்னமும் ஒரு எக்கவுண்டும் உருவாக்கவில்லை என்று தெரிகின்றது காரணம் இ-மெயில் பெட்டியினுள் ஒன்றுமில்லை இனி நாங்கள் இ-மெயல் எக்கவுண்டை உருவாக்குவோம்

படம் 2

படம் 2ல் உள்ளவாறு E-mail தெரிவுசெய்து பின்னர் Hinzufügen தெரிவுசெய்து படம் 3 ல் உள்ளவாறு E-mail ... தெரிவுசெய்க


படம் 3

படம் 4 கிடைக்கும் அதில் உ+ம் Kandasamy Ravi என்று கொடுத்துள்ளேன் அதேபோல உங்கள் பெயரைக் கொடுங்கள்

படம் 4

பின்னர் Weiter தெரிவுசெய்யும்பொது படம் 5 கிடைக்கும் அதில் (உ+ம் ravi@bluewin.ch ) உங்களின்
இ-மெயில் முகவரியை எழுமதவும் (Bluewin ல் எக்கவுண்ட் திறக்க விரும்பினால் அதன் முகவரியை எழுதவும்)

படம் 5

தொடர்தும் Weiter தெரிவுசெய்யும்பொது படம் 6 கிடைக்கும் அதில் படம் 6 ல் உள்ளவாறு கொடுக்கவும்

Posteingangserver (POP3) -- pop.bluewin.ch

Postausgangserver (SMPT) -- mail.bluewin.ch

(இ-மெயில் அனுப்ப பெற்றுக்கொள்ள இரண்டுவகையான Protocols உள்ளன

1.POP (Post Office Protocol) Protocol மூலம் நீங்கள் இ-மெயில் பெறுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது

2.SMPT (Simple Mail Transfer Protocol ) மூலம் நீங்கள் இ-மெயில் அனுப்பப்பயன்படுகின்றது



படம் 6


தொடர்தும் Weiter தெரிவுசெய்க படம் 7 ல்


Kontoname என்ற இடத்தில் நீங்கள் ஏற்கனவே Bluewin நிறுவனத்துக்கு கொடுத்தபெயர்
கொடுக்கவும்

Kennwort என்ற இடத்தில் நீங்கள் ஏற்கனவே Bluewin நிறுவனத்துக்கு கொடுத்த kennwort
கொடுக்கவேண்டும்

(அதாவது நீங்கள் Bluewin நிறுவனத்திடம் எக்கவுண்ட் திறக்கும்போது கொடுத்த kennwort)





படம் 7



Weiter தெரிவுசெய்யும்போது இன்னாருதிரை தோன்றி பதிவுசெய்யவா என்று கேட்கும் அப்போது
Fertig stellen கிளிக் செய்யும்போது Bluewin எக்கவுண்ட் உருவாக்கப்டும்

எனிமேல் உங்களுக்கு வரும் அனைத்து இ-மெயில்களும் தானாகவே உங்கள் எக்கவுண்டுக்கு
Outlook Express ல் Posteingang ல் வந்துவிடும்



Outlook Express ல் மெனுவில் Extras தெரிவுசெய்து Konten.. ஐ தெரிவுசெய்க உங்கள் எக்கவுண்ட் உருவாகியிருக்கும் படம்.8

இவ்வாறு உங்களுக்கு பல இ-மெயில் முகவரி இருந்தால் அதற்காகவும் எக்கவுண்டுகளை உருவாக்கலாம்

August 3, 2007

இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன?

மதங்கள், காலம், காலமாகத் தோற்றும் காவியங்கள்.

இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன?
எங்கு இருப்பவன் இறைவன். நீக்கமற நிறைந்திருப்பவன்.
எல்லாவிடங்களிலும் வியாபித்து இருப்பவன்.
இது மதங்கள் மூலம் நமக்கு தரும் செய்தி.

ஒன்றே ஒரு குலம்; ஒருவனே தேவன் என்று பல முறை படித்துள்ளோம்.
அவன் உருவமற்றவன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆளுக்கொரு கடவுள் என்றும்; அது வித்தியாசம் என்றும்;
அது உன் கடவுள்; அது தாழ்ந்தது, இது உயர்ந்தது.... என்ற தெரு சண்டை தினம்.
இன்னும் இந்த வீணான சர்ச்சை.....

மதங்களின் பெயரால் மனிதகுலம் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டுயிருக்கிறது
வேதங்களும், பைபிலும், குர்ரானும் கூறுகிறது ஒரே மொழி.
சமயங்களில் கூறுவதை கூர்ந்து பார்த்தால் மாறான கருத்தில்லை.
சைவம் என்றாலும், அல்லா என்றாலும், பிதா என்றாலும் மூலத்தில் ஒன்றுதான்.
உணர்த்துவது ஒன்றுதான்.

விவேகம் இல்லாதவர்கள், புறவேற்றுமை முக்கியம் கொடுக்கிறவர்கள் சிந்திக்கவேண்டும்.

'' சாதியிலே, மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடியிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து விணே அழிதல் அழகலவே ''
என்கிறார் வள்ளலார்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார் -நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் இன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

என்ற பாரதியின் வாக்கு நமது பழக்கத்தை மாற்றவேண்டும்.

மதங்களுக்கு இரண்டு முகங்கள்.
ஒன்று : அதன் தத்துவம் சார்ந்தது. அன்பையும் மனித உறவுகளாகவும்
போற்றுகிற ஆன்மீகம் முகம்.

இன்னொன்று : இந்த ஆன்மீகத்தன்மைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட
சடங்கு, பூசை, யாகம், பலி என்ற சடங்கு.
மறைந்த ஆன்மீகம் முன் நிற்க வேண்டும்.
ஆனால், சடங்குதான் ஆமீகத்தை விழுங்கி விட்டு கோணல் பல சிரிக்கின்றன

July 31, 2007

சச்சின் டெண்டுல்கர்





பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைச்சிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16வது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.
சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஐந்து வீரர்களில் ஒருவராவார்


ஆட்டங்கள்
test-135
odi-384


ஓட்ட சராசரி
test- 54.70
odi-44.05
ஓட்டங்கள்
test-10,668
odi-14,847


100கள்/50கள்
test-35/44
odi-41/77

அதிக ஓட்டங்கள்
test- 248*
odi-186*