இணையத்தள வாசகர்களின் கவனத்திற்கு….. மிக விரைவில் இவ் இனணயதளதில் அதிக அளவான ஆக்கங்கள் இனணக்கபடும் உங்கள் ஆக்கங்கள் இடம்பெற விரும்பினால் எமக்கு உடன அனுப்புகள் ஆயினும் எவராக இருப்பினும் ஆக்கபூர்வமாக தரமான வார்த்தைகளில் நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் மட்டுமே நாம் எமது இணையத்தளத்தில் பிரசுரிப்போம். theshan_10@yahoo.com .நன்றி.--திஷாந்--.

July 31, 2007

சச்சின் டெண்டுல்கர்





பிறப்பு - ஏப்ரல் 24, 1973) தலைச்சிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16வது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.
சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும், அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.டெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த ஐந்து வீரர்களில் ஒருவராவார்


ஆட்டங்கள்
test-135
odi-384


ஓட்ட சராசரி
test- 54.70
odi-44.05
ஓட்டங்கள்
test-10,668
odi-14,847


100கள்/50கள்
test-35/44
odi-41/77

அதிக ஓட்டங்கள்
test- 248*
odi-186*

July 20, 2007

பிரபல வாகனங்களும் அதன் பிறப்பிடமும்

  1. Alfa Romeo-இத்தாலி

  2. Audi-ஜெர்மனி

  3. Austin-பிரிட்டன்

  4. Benz-ஜெர்மனி

  5. BMW-ஜெர்மனி

  6. Bristol-பிரிட்டன்

  7. Chrysler-அமெரிக்கா

  8. FIAT-இத்தாலி

  9. FORD-அமெரிக்கா

  10. General Motors-அமெரிக்கா

  11. HONDA-ஜப்பான்

  12. Hyundai Motor Company (HMC)& Kia- தென் கொரியா

  13. ISUZU-ஜப்பான்

  14. Jaguar-பிரிட்டன்

  15. Kia- தென் கொரியா

  16. Lambert-அமெரிக்கா

  17. LAND ROVER-பிரிட்டன்

  18. Lexus-ஜப்பான்

  19. Mazda-ஜப்பான்

  20. Mercedes-ஜெர்மனி

  21. Mitsubishi-ஜப்பான்

  22. Opel-ஜெர்மனி

  23. Peugeot-பிரான்ஸ்

  24. Porsche-ஜெர்மனி

  25. Renault-பிரான்ஸ்

  26. Standard-பிரிட்டன்

  27. Subaru-ஜப்பான்

  28. Suzuki-ஜப்பான்

  29. Toyota -ஜப்பான்

  30. Volkswagen-ஜெர்மனி

  31. Volvo-ஸ்வீடன்

July 14, 2007

மிருகம், மனிதன், மாமனிதன்

புலன்கள் மூலமாகப் பொருட்களைப் பார்ப்பதும், அப்படி நாம் பார்க்கும் போது நமது ஜீவகாந்த சக்தி செலவு ஆவதால் இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருவதும், புலன்கள் மூலமாக வரக்கூடிய வாழ்க்கை. உலகியல் வாழ்க்கை. அதற்கு மேலாக உண்மையை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, அதற்குத் தக்கவாறு அருள்வாழ்வு வாழ வழி வகுத்துக் கொண்டு வாழக்கூடிய ஒரு பேராற்றலும் மனிதனிடத்தில் இருக்கிறது. ஆனால், மற்ற ஜீவராசிகளிடமும் இந்த அறிவு இல்லையா என்று பார்த்தால் இருக்கிறது. ஆனால் அந்த அறிவைச் செயல்படுத்தக் கூடிய வாய்ப்பே அவற்றுக்கு இல்லை.

பசி எடுத்தால் சாப்பிடவேண்டும். ஆனால், சாப்பாட்டிற்கு உணவு உற்பத்தி செய்ய எந்த ஜீவனாலாவது முடியுமா? உலகத்திலே, மனிதன் ஒருவனுக்குத் தான் தனக்கு வேண்டிய உணவைத் தானே உற்பத்தி செய்து சாப்பிடக்கூடிய திறமை உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு இல்லை. அவை என்ன செய்கின்றன?

'மற்றொரு ஜீவன் தன் வாய்க்குள் போகக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கும் மேலாகத் தன்னால் கொன்று அதைச் சாப்பிடக்கூடிய, தன் வலிவுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்' இப்படித்தான் அததற்கு உரிய உணவை எல்லா ஜீவனும் தேடிக் கொள்கின்றன. உலகத்திலுள்ள எந்த ஜீவன் ஆனாலும் சரி, ஓரறிவான மரம், செடி, கொடி தவிர இரண்டாவது அறிவாகத் தோன்றி புழுவிலிருந்து மற்ற பூச்சிகள், பறவைகள், கால்நடைகள் எல்லாமே ஒரு உயிரைக் கொன்று வாழக்கூடியவை தான். ஆனால், அதனாலெல்லாம் அது கொலை செய்கிறது என்று உயிரினங்கள் பேரில் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில், அவற்றுக்கு உணவு உற்பத்தி செய்யத் தெரியாது.

ஆனால், அதையே மனிதன் செய்யும்போது குற்றமாகக் கொள்கிறோம். ஏன் என்றால், துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழ வேண்டும் என்று நம்மால் நினைக்க முடியும். இந்த உணர்வைச் செயல்பாட்டில் கொண்டு வந்தால் அதற்குத் தகுந்தவாறு திட்டமிட்டு வாழக்கூடிய அறிவு மனிதனிடம் இருக்கிறது. இப்போது மனிதனுடைய சிறப்பை உணர்ந்து கொள்கிறோம். இந்தச் சிறப்பை உணர்ந்து யார்க்கும் எவருக்கும் துன்பம் உண்டாகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, இதெல்லாம் தெரியாமல் துன்பத்தில் உழலும் மற்ற மனிதர்களும் அறிவு மேம்பாடு பெற அருள் தொண்டாற்றுவதற்கு அந்தச் சிறந்த மனிதன் முன்வரும்போது மாமனிதனாகிறான்.

-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

ஆம்ஸ்டெர்டாம்: ஒரு பயணக்குறிப்பு - I

பெல்ஜியத்தை ஐரோப்பாவின் இதயம் என்று சொல்வார்கள். காரணம், மற்ற ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, ப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ப்ரிட்டன், நெதர்லாந்த், லக்சம்பர்க் மற்றும் பல நாடுகளையும் இணைக்கும் இருப்புப் பாதைகள், பெல்ஜியத்தை மையமாக கொண்டு இயங்குகின்றன. அதோடு, ப்ரஸ்ஸல்ஸ், ஐரோப்பாவின் மிக முக்கிய நகரங்களான ஆர்ம்ஸ்டெர்டாம், லக்சம்பர்க், பாரிஸ், லண்டன், ஸ்ட்ராஸ்பர்க், ஷுரிக், பெசில், கொலன்,

இப்பொழுது ஆம்ஸ்டெர்டாம் நோக்கிப் போவதற்கு முன், ஐரோப்பாவில் ரயில் போக்குவரத்து பற்றி சில முக்கியமான விசயங்களைப் பார்ப்போம். ப்ரஸ்ஸல்ஸிலிருந்து, பாரிஸ் 336 கி மீ தூரத்தில் இருக்கிறது. இதைக் கடப்பதற்கு, தாலிஸ் என்ற விரைவு ரயில் எடுத்துக்கொள்ளும் நேரம் 1 மணி 27 நிமிடங்கள் மட்டுமே. அதாவது, 237 கிமீ/மணி என்ற வேகத்தில் பயணிக்கிறது அந்த ரயில். இன்னொரு தகவல. ப்ரஸ்ஸல்ஸிலிருந்து, லண்டன் செல்வதற்கு ஆகும் நேரம் 2 மணி 20 நிமிடங்களே! உங்கள் பயணத்தை, நீங்கள் லில்லியிலிருந்து (ஃப்ரான்ஸ்) தொடங்குவீர்கள் என்றால், நீங்கள் புறப்படும் நேரத்திற்கு முன்பே ஆஸ்போடில் (இன்கிலாந்து) இருப்பீர்கள்!! அது எப்படி?

அடுத்த படியாக பட்ஜெட் விசயத்திற்கு வருவோம். இங்கே வார இறுதியில் ஊர் சுற்றி வருவது ரொம்பவும் மலிவானது. மற்ற நாட்களில் பயணப்படுவதைக் காட்டிலும் 10 - 20 சதவீதம் பயணச்சீட்டு விலை குறைவு. இது எல்லா நாடுகளுக்குச் சென்று வரவும் பொருந்தாது. (உதாரணமாக பாரிசிற்கு, வாரத்தின் வேலை நாட்களில் சென்று வருவது மிகவும் மலிவானது.) ஆனால், ஹாலந்துக்கோ, லகஸம்பர்க்கிற்கோ இது பொருந்தும். அதோடு, வார இறுதிச் சலுகைப் பயணம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கி, ஞாயிறு நள்ளிரவு வரை பொருந்தும். நாங்கள் வாங்கியிருந்த பயணச்சீட்டின் விலை 40 யுரோ!!! (Rs 2220)





விடியற்காலை 4 மணிக்கே எழுந்து, நூடுல்ஸ் மற்றும் புளியோதரை செய்து, பாத்திரங்களில் நிரப்பிக்கொண்டு, 7.20 மணிக்கான ரயிலைப் பிடித்து, ஆம்ஸ்டெர்டாமை நோக்கிச் சென்றோம். ஒருகாலத்தில் எனது சிறு வயதில், குடும்பத்தோடு திருச்செந்தூர், இராமேஸ்வரம் அல்லது கன்னியாகுமரி சுற்றுலா செல்ல, இப்படித் தான் புளியோதரை, துவையல் தயார் செய்துகொண்டு சென்றுவந்தது ஞாபகத்திற்கு வருகிறது. இப்பொழுது குளிர்காலம் தொடங்க ஒரு சில வாரங்களே இருக்கின்றன. அதனால், குளிரின் கடுமை அந்த காலை நேரத்தில் உணரும் அளவிற்கு இருந்தது. உங்களுக்கு ஒரு அறிவுரை! ஐரோப்பாவில், உங்கள் ஊர் சுற்றும்
படலத்தை, முடிந்த அளவிற்கு, கோடை முடிவதற்குள்ளாகவே வைத்துக்கொள்ளுங்கள்.

பயண நேரம் மூன்று மணி நேரம். இடையில், ஐந்தாறு நிலையங்களில் ரயில் நின்றது. இந்த தடத்தில் உள்ள முக்கியமான இடங்களாக ஆன்ட்வெர்பன் (பெல்ஜியம்), ரோஸெந்தால் (ஹாலந்து), தி ஹேக் (ஹாலந்து) போன்ற இடங்களைச் சொல்லலாம். ஆண்ட்வெர்பன் மற்றும் ஆம்ஸ்டெர்டாம் வைர நகைகளுக்கு பெயர் போனவை. ஒருவர் விரும்பினால், ஆண்ட்வெர்பன் வைரத் தொழிற்சாலையைப் பார்த்துவிட்டு வரலாம். தூய்மையான வைரம் வேண்டுமென்றால், இந்த இடங்களில் வாங்கிக்கொள்வது நல்லது.




சில தொழிற்சாலைகளில், வைர கற்களை எப்படி தூய்மைப் படுத்துவது என்பது பற்றிய நேரடியான செய்முறை விளக்கம் கொடுக்கிறார்கள். நீங்கள் மேலே பார்க்கும் படங்களில் இரண்டுமே வைரக்கற்கள் தான். இரண்டாவது, பாலிஸ் செய்யப்பட்டதற்குப் பின்!


இந்த இடத்தில் ஆண்ட்வெர்பனைப் பற்றி சில விசயங்களைச் சொல்வது நல்லது என்று நினைக்கிறேன். ஆண்ட்வெர்பன், பெல்ஜியத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. இதுவே உலக வைர வரத்தக மையம் என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு அதிசயமான, இந்தியன் என்ற முறையில் பெருமை கொள்ளத்தக்க தகவல், இங்கே 400க்கும் மேலான, இந்திய (குஜராத்தி) குடும்பங்கள் இருக்கின்றனவாம். இங்கே நடைபெறுகிற வைர வியாபாரத்தின் தூண்கள் என்று இவர்களைச் சொன்னால் மிகையாகாது. இவர்களுக்கென்று, ஒரு கிரிக்கெட் விளையாடும் மைதானம், திரையரங்கம் மற்றும் ஜைன் கோயில் என்று எல்லாம் உண்டு. ஆச்சரியப்படவேண்டிய விசயம் தான்!!! அதை விட இன்னொரு சந்தோசப்படவேண்டிய தகவல், இங்கே நடைபெறும் வைர வணிகத்தில் இந்தியர்களின் பங்கு கடந்த 20 வருடங்களில் 25 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதோடு, இவர்களுக்கு போட்டியாளர்களான யூதர்களின் பங்கு 70 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் யூதர்களின் மதம் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? சூரியன்
உதித்தபின் கடையைத் திறப்பதும், சூரியன் மறைந்த பின் கடையை மூடிவிடும் யூதர்களால், எப்பொழுது வேன்டுமென்றாலும், கடையைத் திறந்து வைத்திருக்கும் இந்தியர்களோடு போட்டி போட முடியாமல் போனது ஆச்சர்யமில்லை தான்.

அடடா! ஆண்ட்வெர்பனிலேயே அதிக நேரம் செலவழித்துவிட்டோம். மீண்டும், நமது ஆம்ஸ்டெர்டாம் நோக்கிய பயணத்தைத் தொடர்வோமா?