இணையத்தள வாசகர்களின் கவனத்திற்கு….. மிக விரைவில் இவ் இனணயதளதில் அதிக அளவான ஆக்கங்கள் இனணக்கபடும் உங்கள் ஆக்கங்கள் இடம்பெற விரும்பினால் எமக்கு உடன அனுப்புகள் ஆயினும் எவராக இருப்பினும் ஆக்கபூர்வமாக தரமான வார்த்தைகளில் நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் மட்டுமே நாம் எமது இணையத்தளத்தில் பிரசுரிப்போம். theshan_10@yahoo.com .நன்றி.--திஷாந்--.

June 12, 2007

இணையத்தள வாசகர்களின் கவனத்திற்கு…..

மிக விரைவில் இவ் இனணயதளதில் அதிக அளவான ஆக்கங்கள் இனணக்கபடும்
உங்கள் ஆக்கங்கள் இடம்பெற விரும்பினால் எமக்கு உடன அனுப்புகள்
ஆயினும் எவராக இருப்பினும் ஆக்கபூர்வமாக தரமான வார்த்தைகளில் நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் மட்டுமே நாம் எமது இணையத்தளத்தில் பிரசுரிப்போம்.
theshan_10@yahoo.com

பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது


ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹூஸ்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்ட் ஆரெட்ஸ் என்ற மாணவர் கூறியது: புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும் என்று தெரிந்த அளவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவில்லை என்றார். ஆய்வில், 4 முதல் 12 வயதுக்குள்பட்ட 244 குழந்தைகளின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவர்களது பிற நோய்கள் குறித்த விவரம் கருத்தில் கொள்ளப்படவில்லை. பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத பெற்றோரின் குழந்தைகள், குழந்தை பிறந்த பின் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆனால் கருவுற்ற காலத்தில் இப் பழக்கம் இல்லாதவர்களின் குழந்தைகள், கருவுற்ற காலத்தில் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஆனால் குழந்தை பிறந்த பின் இப் பழக்கம் இல்லாதவர்களின் குழந்தைகள், குழந்தை பிறக்கும் முன்பும் பிறந்த பின்பும் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் குழந்தைகள் எனப் பிரிக்கப்பட்டிருந்தனர். புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களைப் போல் அவர்களது குழந்தைகளுக்கும் நுரையீரல் செயல்பாடு குறைந்து கொண்டே வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும், கருவுற்ற காலத்தில் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததைவிட, குழந்தை பிறந்த பின் அப் பழக்கம் தொடர்வது மிகவும் ஆபத்தானது என்றும் தெரியவந்தது. இந்த ஆய்வைத் தொடர்ந்து, புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் 2000 குழந்தைகளைக் கொண்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளார் இம் மாணவர்.

June 11, 2007

ஓசையில்லா விமானம் வடிவமைப்பு



கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள்.எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும்.மற்ற மரபு ரீதியான விமானங்களை விட இந்த விமானம் குறைந்த அளவே எரிபொருளை உபயோகிக்கும்.மூன்று வருட உழைப்பின் பலனாக இந்த வடிவமைப்பு உருவாகியுள்ளது.இந்தப் புதிய வகை விமானத்தின் உருவம், வளையும் இறக்கைகள் வடிவமைப்பு எனக் கூறப்படும் திட்டத்தின்படி அமையும்.ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த விமானத்தை வடிவமைத்தவர்கள், எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன் வெளிக்கட்டமைப்பை வழவழப்பாக செய்துள்ளனர்.இது போன்ற இலகுவான வடிவமைப்புடைய விமானங்களால், விரைவாக விண்னில் எழும்ப முடியும், மேலும் தரையிரங்கும் போது ஓடுபாதையை நோக்கி மெதுவாக இறங்க முடிவதால், மரபு ரீதியான மற்ற விமானங்களை விட ஓசை குறைவாக இருக்கும்.விமானம் ஏறும் போதும் தரையிரங்கும் போதும் விமானத்தைச் சுற்றி ஏற்படும் காற்றுக் கொந்தளிப்புத் தான் விமானத்தினால் ஏற்படும் ஓசைக்கு காரணம்.இந்தப் புதிய வடிவமைப்பின் மூலம், விமானத்தின் மேற்பரப்பின் ஊடேச் செல்லும் காற்றின் கொந்தளிப்பானது விமானத்தின் பின்பகுதியிலுள்ள கொந்தளிப்பற்ற காற்றை எதிர்கொள்ளும் போது, ஒருவிதமான சமன் ஏற்பட்டு விமான ஓசை குறைகிறது

கம்ப்யூட்டர் கேம்ஸ் நல்லதும் கெட்டதும்


விடியோ கேம்ஸ் விளையாட தனியாக விடியோ கேம் விளையாடும் சாதனம் தேவையில்லை. கம்ப்யூட்டரிலேயே அருமையாக விளையாடலாம். அதற்கான புரோகிராம்களை அமைத்து இயக்கினாலே போதும். ஆனால் பலரும் இதற்கு அடிமை ஆகிறார்கள். பிறரின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள், பெண் நண்பர்கள், மனைவிகள் நிச்சயமாய் நாம் இந்த விளையாட்டுக்களை விளையாடுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் நாம் அவர்களையும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் மறக்கிறோம் அல்லவா? ஆனால் எதிலும் நன்மைகளும் தீமைகளும் இருப்பது போல இவ்வகை விளையாட்டுக் களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. அவற்றை இங்கு காணலாம். முதலில் நன்மைகளைக் காணலாம்.1. மன அழுத்தக் குறைவு : நம்மில் மன அழுத்தம் ஏற்படாவதர்களே இல்லை எனலாம். ஏதேனும் ஒரு செயல் நம்மை அதிகம் சிந்திக்க வைத்து நம்மை அழுத்திக் கொண்டே தான் இருக்கும். இந்தச் சூழ்நிலையில் கம்ப்யூட்டருடனே வரும் டெட்ரிஸ் மற்றும் மைன்ஸ்வீப்பர் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது நம் மன அழுத்தத்தினைக் குறைக்கும். விளையாட்டுக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நம் திறமையைச் சோதிப்பதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம் மன அழுத்தம் சிறிது சிறிதாக விலகத் தொடங்கும்.2. லாஜிக் திறன் வளர்ச்சி: அநேகமாக அனைத்து விளையாட்டுக்களும் நம் சிந்தனையை முறைப் படுத்துகின்றன. இந்நாளைய கல்வி முறை கற்றுக் கொடுக்க மறந்த திறன்களில் இதுவும் ஒன்று. தர்க்க ரீதியான சிந்தனை யை வளர்த்துக் கொள்வது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த கம்ப்யூட்டர் மற்றும் விடியோ விளையாட்டுக்கள் இதனை வளர்க்கின்றன.3. விரைந்து முடிவெடுக்கும் திறன் : தர்க்க ரீதியான சிந்தனை என்பது தேவையான ஒன்று தான். ஆனால் இது நேரத்தை வளர்த்து சில நேரங்களில் நம்மை மிக மெதுவாகச் செயல்பட வைத்திடும். நமக்கு வேகமான சிந்தனைத் திறன் அவசியம் தேவைப்படுகிறது. இதனால் நாம் விரைவாக சில முடிவுகளை எடுக்க முடியும். பெரும்பாலான விளையாட்டுக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய செயல்களைப் பட்டியல் படுத்தி நம்மை விரைவாக முடிவெடுத்து செயல்பட வைக்கின்றன. எனவே கம்ப்யூட்டர் விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் இந்த விரைவாக முடிவெடுக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.பாதகமான விளைவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஒரு சிலவற்றைப் பட்டியலிடலாம். கம்ப்யூட்டரை வேறு சில கணிக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணம் மறைந்துவிடும். எப்போதும் விளையாட்டுக்களையே இயக்கி விளையாடச் சொல்லும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அலுவலகத்தினை விட்டுச் செல்கையில் தன் மேஜையில் உள்ள கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு விளையாட்டினை அரை மணி விளையாடிவிட்டுத்தான் செல்கிறார். ஏறத்தாழ அடிமை ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும்.எதற்கு கம்ப்யூட்டரை வாங்கினோமோ அந்த நோக்கம் போய் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் வந்துவிடும். இதனால் கல்வி கற்றல், ஆய்வு மேற்கொள்ளல் மற்றும் அலுவலகப் பணிகளை இயக்குதல் ஆகியவற்றிற்கென கம்ப்யூட்டர் வாங்கியவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பின் தங்கும் நிலை ஏற்படும். குறிப்பாக மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுக்கும் அவர்களுடைய பெற்றோர்கள் இதனைக் கண்காணிக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் கம்ப்யூட்டரில் விளையாட் டுக்களை விளையாடினால் முதலில் அவர்களைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பின்னர் அவர்களின் விளையாடும் நேரம் அதிகரித்தால் கொஞ்சம் கொஞ்சமாக எச்சரித்து அவர்களை அப்பழக்கத் திலிருந்து விலக்க வேண்டும்.அலுவலகத்தில் ஊழியர்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த எச்சரிக்கை நடவடிக்கையைச் சிறிது தீவிரமாகவே மேற்கொண்டு பணி நேரத்தில் யாரும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களில் ஈடுபடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களும் கத்தியைக் கையாள்வது போன்ற ஒரு செயலாகத்தான் தெரியும். கவனமாக நமக்குத் தேவையான அளவில் கையாண்டுவிட்டு பின்னர் கத்தியைப் பாதுகாப்பாக வைத்துவிடுவது போல விளையாட்டுக்களை ஓய்விற்காகவும் புத்துணர்ச்சி பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நாசாவின் அத்லான்டிஸ் விண்கலம் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது



மேற்படி விண்கலமானது ஏவப்பட்டு 9 நிமிடங்களுக்குகுறைந்த நேரத்தில் தனது பயணப் பாதையை சென்றடைந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு சூரிய சக்தி அகத்துறிஞ்சும் தகடுகள் உள்ளடங்கலாக புதிய அமைப்புகளை ஸ்தாபிக்கும் தொடர்ச்சியான பணிகளை மேற்கொள்ளும் இலக்கில் 7 விண்வெளி வீரர்கள் இந்த அத்லான்டிஸ் விண்கலத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே இந்த விண்கலத்தை ஏவ கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திட்டமிடப்பட்டிருந்த போதும் சீரற்ற காலநிலை காரணமாக அத்திட்டம் பிற்போடப்பட்டது. நாசா இதற்கு முன் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தனது விண்கலமொன்றை விண்ணுக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2003 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட கொலம்பிய விண்கலமொன்று வெடித்துச் சிதறிய தில் அதிலிருந்த 7 விண்வெளி வீரர்களும் பலியாகியமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஓய்வு காலமான 2010 ஆம் ஆண்டுக்குள் மேற்படி புத்தமைப்பு முறைமைகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடுமென நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.